பொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதி, தியசிரிகம பகுதியில் நேற்றிரவு 9.30 மணியளவில் கொழும்புக்கு தேயிலை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவயிலிருந்து கொழும்பிற்கு 10 ஆயிரம் கிலோகிராம் தேயிலை தூலை ஏற்றிச்சென்ற லொறியை நோர்வூட் பொலிஸார் நோர்வுட் நகரில் சோதனைக்காக நிறுத்திய போது, அதன் சாரதி மதுபோதையில் பொலிஸாரின் கட்டளையை மீறி வேகமாக லொறியை செலுத்தியதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

