சர்வதேச பெண்கள் தினம் இன்று திருகோணமலையிலும் அனுஷ்டிக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்திற்கான நிகழ்வு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்தியக் காரியாலயத்தின் எற்பாட்டில் திருகோணமலை குளக்கோட்டன் அரங்கில் இடம்பெற்றது.
சிறு கைத்தொழிலை தமது வாழ்வாதாரமாகக் கொண்ட பெண்கள் தமது தொழில்துறையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக இது நடைபெற்றது.