தமிழர்களில் 11 முட்டாள்களும் 5ராஜதந்திரிகளும்?

645 0

அண்மையில் தமிழரசு கட்சிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டத்தின்போது சிலர் பொய்களை கூறி தவறாக சிலர் வழிநடாத்தி வருவதாகவும் அந்த பொய்களுக்கு இப்போது கூட்டமைப்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிக்கியிருப்பதாகவும் ஐ.நா இலங்கைக்கு கால அவகாசம் வழங்கவேண்டும் என தெரிவித்த நிலைப்பாட்டிற்கு எதிராக த.தே.கூட்டமைப்பிலுள்ள 16 உறுப்பினர்களில் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு மகஜர் அனுப்பியிருக்கிறார்கள்.

இவர்கள் என்ன தெரிந்து கையொப்பம் இட்டார்கள் எந்த முட்டாள் கால அவகாசம் வேண்டாம் எனச்சொல்லுவான். இவர்கள் அவ்வாறு ஏன் செய்தார்கள் எனத்தெரியவில்லை. எங்கள் உறுப்பினர்களையும் சேர்த்துதான் சொல்கிறேன் அவர்களுக்கு இதன் தாற்பரியம் புரியுமா எனவும் கேள்வி இவ்வளவு நாட்களாகியும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உலக அறிவு தெரியவில்லையா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர்களுக்கு அதன் தாற்பரியம் புரியுமா எனவும் கேள்வி எழுப்பியதோடு அந்த மகஜரில் சம்பந்தன், மாவை மற்றும் வெளிவிவகாரத்திற்கு பொறுப்பான தான் மற்றும் இரு தமிழரசு கட்சி உறுப்பினர்களும் கையொப்பம் இடவில்லை எனவும் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர்கள் இளைஞர் படையணியொன்று உள்ளது இறக்கிபாருங்கள் எனச்சொன்னதை அவர்கள் ஆயுதம் தூக்க முற்படுவதாக தவறாக அர்த்தப்படுத்தியும் தனது வரலாற்று பாடத்தை நிறைவு செய்ததோடு தொடர்ந்தும் பிரதேச ரீதியாக ஆட்சேர்ப்பு இடம்பெறும் என்றும் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கு ஆசனம் வளங்கப்படும் என்ற உத்தரவாதத்துடன் பலர் இணைக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது.