பெசில் ராஜபக்ஷவுக்கு பிணை

278 0
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அரசாங்க நிதியில் இருந்து ஜீ.ஐ குழாய்களைக் கொள்வனவு செய்து, உள்ளுராட்சி மன்றங்களுக்கு வழங்கியமை தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திட்டத்தின் முன்னாள் பணிப்பாளர் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
குறித்த நடவடிக்கையால் அரசாங்கத்துக்கு 36 லட்சம் ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்படி அவர்கள், தலா 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், 100 லட்சம் ரூபாய் பெறுமதியான 3 சரீரபிணைகளிலும் விடுவிக்கப்பட்டனர்.