இலங்கை கடற்படைக்கு எதிராக போரிட வேண்டும் – சுப்ரமணியன் சுவாமி

223 0

இலங்கை கடற்படைக்கு எதிராக போர் தொடுங்கள் தமிழக பொறுக்கிகள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்திருப்பது தமிழக மக்கள் பலருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தமிழக இளைஞர்களை கடுமையாக விமர்ச்சித்தார். அதன் பின்னர் அவர் தமிழர்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பொறுக்கிகள் என்று கூறத்துவங்கினார்.

நேற்று தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக பொறுக்கிகள் நகர சாக்கடைகளில் மறைந்து வாழ்வதை விட்டுவிட்டு,கட்டுமரங்களை எடுத்துக் கொண்டு இலங்கை கடற்படைக்கு எதிராக போரிட வேண்டும், என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே சுப்ரமணியன் சுவாமி மீது தமிழக மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் அவர் இது போன்று கூறியிருப்பது, மேலும் ஆத்திரத்தை தான் தூண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.