சர்வதேச மகளிர் தினம்: கவர்னர் வாழ்த்து

488 0

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் வாழ்த்துச்செய்தி தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-உலகமயமான பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப புரட்சியும் சர்வதேச அளவில் பெண்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து உள்ளன. இந்தியாவிலும் பெண்கள் முன்னேற்றம் மிகச்சிறப்பான நிலையை எட்டி இருக்கிறது.

பாலின பாகுபாட்டை தவிர்க்கவும், சமத்துவமின்மையை நீக்கவும், பெண் இனத்தை மதிக்கவும், தற்போது மாறிவரும் பணித்தளங்களில் பெண்கள் கூடுதல் அதிகாரம் பெறுவதை மேம்படுத்தவும் இந்த நன்னாளில் உறுதி ஏற்போம்.சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.