போராட்டம் கைவிடப்பட்டது.

262 0

தொடருந்து நிலையங்களின் அதிபர்கள் இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளவிருந்த சேவைப் புறக்கணிப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

தொடருந்து நிலைய அதிபர்களின் தொழிற்சங்கம் இதனை அறிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது.

எனினும் அவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆராய்வதாக தொடருந்து திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் உறுதியளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த சேவைப் புறக்கணிப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.