கடல் மார்க்கமாக இடம்பெறுகின்ற கடத்தல்களை தடுக்கு வேண்டும் – ஜனாதிபதி

316 0

கடல் மார்க்கமாக இடம்பெறுகின்ற கடத்தல்களை தடுக்கு இந்து சமுத்திர நாடுகளின் தலைவர்கள் விசேட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் இந்து சமுத்திர வலைய நாடுகளின் தலைவர்களது மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தைக கூறியுள்ளார்.

குறிப்பாக போதைப் பொருட்களின் கடத்தல்கள் மற்றும் தீவிரவாதிகளின் பரவல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான கடத்தல்களை தடுப்பதற்கு பல வழிமுறைகள் அமுலாக்கப்பட்டுள்ள போதும், அவை தீர்வுகளை வழங்குவனவாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.