முறைப்பாடு பதிவு செய்ய சென்றவர் மீது தாக்குதல் – 3 பேர் கைது

253 0

மீபே காவலரணில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தவற்காக சென்ற ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை தடுக்க முற்பட்ட காவற்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு முறைப்பாடு ஒன்றை பதிவு செய்வதற்காக சென்றவர் மீது சிற்றூர்ந்து ஒன்றில் பிரவேசித்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.