பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் மாற்றத்தினை எற்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலையில் இணைத்துக் கொள்ளும் வகையில் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.