சாவகச்சேரி கல்லடிமுட்டு சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்து(காணொளி)

323 0

சாவகச்சேரி கல்லடிமுட்டு சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி ஏ9 வீதியினூடாக துவிச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த முதியவருடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நுணாவில் மத்தியை சேர்ந்த இளையதம்பி ஆறுமுகம் என்ற 82 வயதுடைய முதியவர் படுகாயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.