தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளனர்- கி.துரைராஜசிங்கம் (காணொளி)

254 0

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்தின் சிறுவர் விளையாட்டு விழா நேற்று நடைபெற்றது.

பாடசாலைக்கு முன்பாகவுள்ள பகுதியில் பாடசாலை அதிபர் எஸ்.முருகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராஜா, ஞா.கிருஸ்ணபிள்ளை மற்றும் பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்களின் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பல வித்தியாசமான விளையாட்டுக்களும் நடைபெற்றன.

விளையாட்டு நிகழ்வினை தொடர்ந்து வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டதுடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்