மகாறம்பைக்குளம் 9ம் ஒழுங்கை பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு(காணொளி)

289 0

வவுனியா மகாறம்பைக்குளம் 9ம் ஒழுங்கை பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

விநாயகமூர்த்தி ரமணி வயது 60 என்ற நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு மகளுடன் உணவு உட்கொண்டுவிட்டு வீட்டின் பின்புறம் தாய் சென்றதாகவும் நீண்ட நேரம் வராததையிட்டு தேடிச்சென்ற வேளையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டதாகவும் பிள்ளைகள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன்மேலதிக விசாரணைகளுக்காக சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இதேவேளை உயிரிழந்த குறித்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.