4 மாத கைக்குழந்தையை கொன்ற தாய்!

274 0

மாத்தளை – கெந்தகொள்ள – வெஹிகல பிரதேசத்தில் நான்கு மாத கைக்குழந்தையொன்று அவரின் தாயாரால் கொலை செய்யப்பட்டுள்ளது.

வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட குறித்த குழந்தை அயல் வீட்டு பெண்ணொருவரால் இன்று காலை மாத்தளை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் , குழந்தை இறந்து காணப்பட்டதாக மருத்துவமனை காவற்துறை தெரிவித்திருந்தது.

இந்த குழந்தையின் தாய் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.