சசி வெல்கம பிணையில் விடுதலை

247 0

இலங்கை போக்குவரத்து சபைக்கு உரிய 12 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சசி வெல்கமவிற்கு இன்று பிணை வழங்கப்பட்டது.

இரண்டு இலட்ச ரூபா ரொக்க பிணை மற்றும் 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணை அடிப்படையில் அவரை விடுதலை செய்ய கொழும்பு உயர்நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.