வடகொரியா மற்றுமொரு ஏவுகனை பரிசோதனை – தென் கொரிய குற்றச்சாட்டு

259 0

வடகொரியா மற்றும் ஒரு ஏவுகனையை பரிசோதனை செய்துள்ளதாக தென் கொரிய குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த ஏவுகனை எந்த என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகனை வட சீனாவை அண்டிய பிரதேசத்தில் இன்று காலையில் இருந்து ஏவப்பட்டுள்ளது.

ஏற்கனவே, வட கொரியா கடந்த பெப்ரவரி மாதம் அணு ஏவுகணை ஒன்றை பரிசோதித்ததுடன் அந்த பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக அந்த நாட்டு தலைவர் கிம் ஜொங் உன் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், வடகொரியாவின் இத்தகைய நடவடிக்கைக்கு சர்வதேச சமூகம் பெரும் கண்டனத்தை வெளியிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.