அமெரிக்காவுடன் மேற்கொண்ட உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் – டில்வின்சில்வா

236 0

கடந்த அரசாங்கம் அமெரிக்காவுடன் மேற்கொண்ட உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜே வி பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் பத்து வருடங்களுக்கு செல்லுபடியாகும் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்தவில்லை.

இலங்கை மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் தரப்புக்களுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கையில், இலங்கை அமெரிக்காவிற்கு பாதுகாப்பு தொடர்பான உதவிகளை செய்துகொடுக்க உடன்பட்டுள்ளதாக டில்வின்சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த உடன்படிக்கையானது இலங்கைக்கு எந்தவொரு பயனையும் தரப்போவதில்லை என டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.