கச்சதீவு உற்சவத்தினை பகிஸ்கரிப்பதாக இந்திய மீனவர்கள் தீர்மானம்

263 0
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்தும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதனைக் கண்டித்து கச்சதீவு அந்தோணியார் ஆலயத் திருவிழாவினை பகிஸ்கரிக்கவுள்ளதாக இராமேஸ்வரம் மீனவர் சங்கத்தலைவர் என்.ஜே.போல் தலமையில் நேற்றைய தினம்  இடம்பெற்ற கூட்டத்தில்  முடிவு செய்துள்ளது.
இந்திய தமிழகத்தின் மீனவர்கள் இலங்கை எல்லைப்பரப்பில் பிரவேசிக்கும் சந்தர்ப்பத்தில் இலங்கை கடற்படை பிடித்துச் செல்கையில் வெறுமனே மத்திய அரசிற்கு ஓர் கடித்த்தினை எழுதிவிட்டு மாகாண அரசு சும்மா இருந்து விடுகின்றது. இதனால் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் மீனவர்களை கைது செய்கின்றனர்
தேர்தல் காலத்ரில் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதி பெற்றுத்தருவதாக கூறிய வாக்குறுதியினை அரசியல்வாதிகளும் மறந்து செயல்படுகின்றனர். எனவே இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 125 படகுகளையும் , 72 மீனவர்களையும் விடுவிக்கும் வரையில் கச்சதீவில் இடம்பெறும் திருவிழாவிற்கு எந்த விசைப்படகுகளும் செல்வதில்லை . எனத் தீர்மானித்து அதன் பிரதியை வுளியிட்டுள்ளனர்.