காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 14ஆவது நாளாக…(காணொளி)

255 0

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று 14ஆவது நாளாக தொடர்கின்றது.

தமது உறவுகளுக்கு இன்னமும் பதிலளிக்காது இந்த அரசாங்கம் பாராமுகமாக  இருக்கின்றது எனவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  விடயத்தில்  இனியும் காலம் தாமதிக்க வேண்டாம் எனவும் இலங்கை அரசுக்கு பொறுப்புக் கூறல் விடயத்தில் ஜ.நா. கால அவகாசம் வழங்கக் கூடாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமக்கு உறுதியான தீர்வு கிடைக்கும் வரைக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தை தொடரப் போவதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்ட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு பல அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துவருவதுடன், அவர்களுக்கு ஆதரவாக போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.