நெடுந்தீவுக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 9 பேர் கைது

263 0

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீவகம் நெடுந்தீவு கடற்பரப்பில், நேற்றிரவு அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட வேளை ஒரு படகில் 6 மீனவர்களும், மற்றொரு படகில் 3 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா தமிழ்நாடு ஜெகதா பட்டணத்தைச் சேர்ந்த கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், திசையறி கருவி செயலிழந்த நிலையில் திசைமாறி பயணித்த போது இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கைதான 9 மீனவர்களும் இன்றையதினம் யாழ்ப்பாண நீரியல்வள திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.