வௌிநாட்டுப் பிரஜை நீரில் மூழ்கி பலி

263 0

கஹதமோதர பிரதேச கடற்பகுதியில் நீராடச் சென்ற வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நீரில் மூழ்கி விபத்துக்குள்ளான இவரை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 68 வயதான ஒருவராவார். சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.