ஒவ்வொரு மாதமும் யாழ்ப்பாணம் செல்வேன் – ஜனாதிபதி

263 0

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு புதிய செயற்திட்டத்தின் ஊடாக புதிய வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

‘ஜனாதிபதியிடம் கூறுங்கள்’ என்ற வேலைத்திட்டத்தின் முதலாவது பிராந்திய காரியாலயம் வடக்கு மாகாண அளுநர் அலுவலகத்தில் நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

ஒவ்வொறு மாதமும் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வடக்கு மாகாணத்திற்கு சென்று தமது அமைச்சுக்கு பொறுப்பான விடயங்களை மேற்கொள்ளுமாறு உரிய அமைச்சுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும், தாம் ஒவ்வொரு மாதமும் யாழ்ப்பாணம் செல்ல உள்ளதாகவும் ஜனாதிபதி இதனை போது குறிப்பிட்டார்.