அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் எனில் ஷமல் போன்றோர் இணைய வேண்டும் – மஹிந்த அமரவீர

329 0

அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் எனில் முன்னாள் சபாநாயகர் ஷமல் ராஜபக்ஸ மற்றும் பல சிரேஸ்ட உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.

முன்னாள் சபாநாயகர் ஷமல் ராஜபக்ஸ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் பங்குகொண்டார்.

எவ்வாறாயினும் ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இந்த கூட்டத்தில் பங்குகெண்டிருக்கவில்லை.

இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே, அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை குறிப்பிட்டார்.