சிறப்பு தேவையுடைய இராணுவத்தினரினால் முப்படையினரின் கௌரவத்திற்கு பாதிப்பு

241 0

கொழும்பு கோட்டையில் சிறப்பு தேவையுடைய இராணுவத்தினர் மேற்கொண்ட போராட்டமானது முப்படையினரின் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன இதனை தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவு வழங்கப்பட இருந்த நிலையில் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் மேற்கொண்டதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.