தகாத வார்த்தைகளால் திட்டிய பொலீஸ் அதிகாரி

280 0
எருமை மாடு – நாயே -நடு வீதியில் தாண்டவமாடிய பொலிஸ் அதிகாரி – ஜனாதிபதியின் யாழ் விஜயத்தில் அசிங்கம்
எருமை மாடு மாதிரிக் கதைக்கிறியே படிச்சிருக்கிறியா மண்டைக்குள் சரக்கு இல்லையா என  யாழ் பொலிஸ் அதிகாரி ஒருவார் காணாமால் போனோர் உறவுகளைப் பார்த்து திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் நிகழ்சித்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இனறையதினம் யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகைதந்திருந்த நிலையில் காணாமல் போனோர் உறவினர்கள்  ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக யாழ் மாவட்டச் செயலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதன்போது வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட சில பொதுமக்கள் ஏ9 வீதியின் குறுக்கே வந்து அமந்திருந்ததால் கடும் சினமடைந்த யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி  கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் என்பவர் வடக்கு மாகாண சபை உறுப்னரை நாய் எனத் திட்டியதோடு நீ ஆரடா றோட்டில இருக்கிறதற்கு இது பப்பிளிக் றோட் போடா வெளியில் என கடுமையாக திட்டியுள்ளார்.
அதனையடுத்து போராட்டம் நடாத்திய தாய் ஒருவரை எருமை மாடு மாதிரிக் கதைக்கிறியே படிச்சிருக்கிறியா மண்டைக்குள் சரக்கு இல்லையா என  திட்டியபோது நியாயம் கேட்ட ஊடகவியலாளரை அச்சுறுத்தி அவரது அடையாள அடையைினைப் பரிசோதித்ததோடு மிக அருவருபான தூசன வார்த்தைகளால அவரை ஆங்கிலத்தில் திட்டியுள்ளார்.