ட்ரம்ப் நாளை சர­ண­டைவார்; கைவி­லங்­குடன் ஆஜ­ரா­க­மாட்டார்

91 0

அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், நாளை சர­ண­டைவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அதே­வேளை, நீpதி­மன்­றத்தில் கைவி­லங்­குடன் ட்ரம்ப் ஆஜ­ரா­க­மாட்டார் என அதி­காரி ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

ஆபா­சப்­பட நடிகை ஸ்டோர்மி டேனி­யல்­ஸுக்கு 2016 ஆம் ஆண்டின் ஜனா­தி­பதி தேர்தல் காலத்தில் ட்ரம்ப் தரப்­பினால் 130,000 டொலர்கள் வழங்­கப்­பட்ட விவ­காரம் தொடர்­பாக ட்ரம்ப் மீது கிரி­மினல் வழக்கு விசா­ரணை நடத்­து­வ­தற்கு நியூயோர்க் ஜூரிகள் குழாம் கடந்த வியா­ழக்­கி­ழமை அங்­கீ­காரம் அளித்­தது.

டொனால்ட் ட்ரம்­புக்கு எதி­ரான விசா­ரணை நியூயோர்க் நேரப்­படி நாளை செவ்­வாய்க்­கி­ழமை பிற்­பகல் 2.15 (இலங்கை நேரப்­படி இரவு 11.45) மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

தற்­போது புளோ­ரிடா மாநி­லத்தில் தங்­கி­யுள்ள ட்ரம்ப், தனது சொந்த விமானம் மூலம் இன்று திங்­கட்­கி­ழமை நியூயோர்க் செல்வார் எனவும், செவ்­வாய்க்­கி­ழமை அவர் அதி­கா­ரி­க­ளிடம் சர­ண­டைவார் எனவும் தன்னை அடை­யாளம் காட்­ட ­விரும்­­­பாத, அமெ­ரிக்க சமஷ்டி அரச அதி­­­காரி ஒருவர் சிபிஎஸ் அலை­வ­ரி­சை­யி­டம் தெரி­வித்­துள்ளார்.

ட்ரம்­புக்கு கைவி­லங்கு போடப்­பட மாட்­டாது. பொது­வாக, பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லான சந்­தேக நபர்­க­ளுக்கே கைவி­லங்­கி­டப்­படும் என அந்த அதி­காரி கூறி­யுள்ளார்.

இதே­வேளை, நாளை அவர் நீதி­மன்றில் சர­ண­டை­யக்­கூடும் ஆனால் எதுவும் நிச்­ச­ய­மில்லை என டொனால்ட் டரம்பின் சட்­டத்­த­ரணி ஜோ டகோ­பினா கூறி­யுள்ளார். தான் நிர­ப­ராதி என வாதா­டுவார் எனவும் டகோ­பினா கூறி­யுள்ளார்.

76 வய­தான டொனால்ட் ட்ரம்ப்,  2024 ஆம் ஆண்டின் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அறி­வித்­துள்ளார். இந்நி‍ைலையில், இவ்­வ­ழக்கு தனக்கு எதி­ரான அர­சியல் உள்­நோக்­க­மு­டை­யது என அவர் கூறி­வ­ரு­கிறார்.

ட்ரம்ப் மீதான கிரி­மினல் வழக்கு விசா­ர­ணைக்கு குடி­ய­ரசுக் கட்­சி­யினர் பலர் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளனர். ஜனா­தி­பதித் தேர்­தலில் ட்ரம்ப் மீண்டும் போட்­டி­யி­டு­வ­தற்கு எதி­ரா­க கருத்துத் தெரி­வித்­தி­ருந்­த­வர்­களும் இவர்­களில் அடங்­குவர்.

அதே­வேளை, ட்ரம்ப் மீதான வழக்கு குறித்து ஜனா­தி­பதி ஜோ பைடன் நேற்­று­முன்­தினம் கருத்து தெரி­விக்க மறுத்­துள்ளார்.

அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி எவரும் இதற்கு முன்னர் குற்­ற­வியல் வழக்கை எதிர்­கொண்­ட­தில்லை. இதனால் ட்ரம்ப் மீதான வழக்கு உலகின் கவ­னத்தை ஈர்த்துள்ளது.

தான் கைது செய்யப்படப் போவ­­­தாக முன்னர் எதிர்வுகூறி­யிருந்த ட்ரம்ப், கைதுக்கு எதிரான ஆர்ப­்­பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்தி­­ருந்தார். நாட்டில் ‘மரணங்­­களும் அழிவுகளும் ஏற்பட இது வழி­வகுக்கும்’ எனவும் அவர் எச்­சரித்­திருந்தமை குறிப்பிடத்­தக்கது.

இந்­நி­லையில், எவ்­பிஐ, நியூயோர்க் பொலிஸ் திணைக்­களம், இர­க­சிய சேவைப் பிரிவு, நியூயோர்க் நீதி­மன்ற அதி­கா­ரி­கன் இணைந்து பாது­காப்பு ஏற்­பா­டுக‍ைளை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன.