‘பன்னீர்செல்வம் அணி’ – சசிகலா தரப்பு அங்கீகரிப்பு

265 0

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள, பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை, சசிகலா தரப்பினர், தனி அணியாக அங்கீகரித்துள்ளனர்.

சசிகலா குடும்பத்திற்கு எதிராக, போர்க்கொடி துாக்கிய, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, கட்சியில் ஆதரவு அதிகரித்தபடி உள்ளது.

சமீபத்தில், சசிகலா அக்கா மகன் தினகரன் பத்திரிகையாளர்களை சந்தித்த போது, ‘பன்னீர்செல்வம் தரப்பை, அணி என்று கூறுவது தவறு. அவர்கள், ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். வேண்டுமானால், குழு என்று கூறலாம்’ என்றார்.

ஆனால், நேற்று அ.தி.மு.க., அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘பன்னீர்செல்வம் அணி’ என, குறிப்பிடப்பட்டிருந்தது, சசிகலா ஆதரவாளர்களிடம், ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

‘திருநெல்வேலி மாநகர் மாவட்டம், செங்கோட்டை ஒன்றிய செயலர் செல்லப்பன், கடையநல்லுார் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் அனீஸ் ஆகியோர், பன்னீர்செல்வம் அணியில் இருந்தனர்.

அவர்கள், தினகரன் முன்னிலையில், நேற்று அ.தி.மு.க.,வில் சேர்ந்தனர்’ என, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.