ரேஷன் கடைகள் முற்றுகை – விஜயகாந்த் ரகசிய உத்தரவு

245 0

உணவுப் பொருட்கள் வழங்காத, ரேஷன் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த, தே.மு.தி.க., மாவட்ட செயலர்களுக்கு, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் ரகசிய உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

ரேஷன் கடைகளில், அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது.

இப்பிரச்னை தொடர்பாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அடுத்தகட்டமாக, ரேஷன் கடைகளில் முற்றுகை போராட்டம் நடத்த, கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து, நிர்வாகிகள் கூறுகையில், ‘ரேஷன் விவகாரம், பெண்களை நேரடியாக பாதிக்கும்.

இதற்காக போராடினால், பெண்கள் ஆதரவு கிடைக்கும் என, விஜயகாந்த் கருதுகிறார்.’அதனால், ரேஷன் கடைகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தும்படி,கட்சியினருக்கு அவர் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளார்’ என்றனர்.