முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,156 ஏக்கர் பொதுமக்களின் காணிகள்

343 0

ravikaran 8546554652முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,156 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

கொக்குளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி ஆகிய பிரதேசங்களிலேயே இக்காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றத்திற்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் சிங்கள மீனவர்களின் குடியேற்றத்திற்காக நாயாறுப் பகுதியில் 150 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு அபகரிக்கப்பட்டுள்ளதுடன், மகாவலித் திட்டம் என்றபெயரில் பங்களா அமைத்து சிங்கள மீனவர்களுக்கான வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், முல்லைத்தீவு சாலை கடற்கரைப் பகுதியில் வெளிமாவட்ட மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.