விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்ததாலேயே பல்கலைக்கழகத்தில் மோதல் உருவாகியது

340 0

Wimal-Weerawansaஉயிர்நீத்த தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூர்ந்ததாலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மோதல் இடம்பெற்றதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையிலும் செய்துகொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின்போதுகூட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அமைதிப்பூங்காவாக செயற்பட்டது.

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில்,இந்த, நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததுமுதல் தமிழ் மக்களுக்கு உயிர் கொடுப்பதை விடுத்து, தமிழ் இனவாதத்திற்கே உயிர் கொடுத்து வருகின்றது.எனினும் எந்தவொரு இனவாதமும் நாட்டில் உயிர்பெற அனுமதிக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.