போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்

86 0

பிற அரசுத் துறைகளை போல போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வலியுறுத்தி சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் சென்னை பல்லவன் சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில், தொழிற்சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: ஆண்டுதோறும் மின்வாரியம் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் போன்றவற்றை வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், போக்குவரத்துக் கழகஊழியர்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. அதேநேரம், துறையின்நஷ்டமும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊழியர் நலன் சார்ந்தவிஷயங்களுக்கு நிதியின்றி,ஊழியர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். எனவே, வரும் பட்ஜெட்டில் ஊழியர்களுக்கென நிதி ஒதுக்க வேண்டும்.

அதேபோல, ஓய்வூதியர்களுக்கு7 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கவேண்டும். அவர்களுக்கு மருத்துவப்படி உயர்வு, மருத்துவக் காப்பீடு போன்றவற்றை வழங்க வேண்டும். கடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்.

சென்னையில் 1,000 தனியார் பேருந்துகள் இயக்கம் உள்ளிட்ட எந்தவித தனியார்மய நடவடிக்கையையும் முன்னெடுக்கக் கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் டி.கே.பாலகிருஷ்ணன், பொதுச்செயலாளர் டி.வி.பத்மநாபன், பொருளாளர் கே.குணசேகரன், ஓய்வு பெற்ற பணியாளர்கள்சம்மேளனத்தின் தலைவர்எஸ்.ஷாஜகான் உள்ளிட்ட பலர்பங்கேற்றனர்.