2 மில்லி கிராம் கஞ்சா வைத்திருந்தவர் கைது

364 0

content_kaithu1கந்தளாய் தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் குளத்துக்கு அருகாமையில் வைத்து 2 மில்லி கிராம் கஞ்சா வைத்திருந்த குருநாகல் குளியாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவரை நேற்று இரவு (17.07.2016) கைது செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குளியாபிட்டிய பகுதியைச் சேர்ந்த இவ் இளைஞன் கந்தளாய் பகுதியில் உள்ள கடையொன்றில் வேலை புரிந்து வந்தவராவார்.இவர் வேலை முடிந்து விட்டு கந்தளாய் குளத்துப் பகுதியில் வைத்து கஞ்சா புகைப்பதற்கு தயாரான நிலையில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவ் இளைஞன் கையுமெய்யுமாக கைது செய்யப்பட்டதாக கந்தாளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்ததனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற் கொண்டுவருவதாக காந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.