யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் புறப்பட்ட பேரூந்து விபத்து

376 0

accident_79-415x260-720x480யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் செல்வதற்காக வந்த பஸ் வண்டியும் ரிப்பர் வாகனமும் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் தயிர்வாடி சந்தியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் வண்டியில் பயணித்த யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (2016.07.18) பி.ப. 5:20 மணியளவில் இடம் பெற்றுள்ளது. அத்தோடு ரிப்பர் வாகனச்சாரதி தப்பித்துச் சென்றுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.