வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்படவுள்ள ஐவர் அடங்கிய வைத்திய குழுவின் உறுப்பினர்கள் வெளிப்படைத் தன்மையுடன் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய இன்று திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னர் நீதவானால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்தக் குழுவின் நியமனத்தின் முன்னேற்றத்தை அறிவிப்பதற்காக இந்த விசாரணையை எதிர்வரும் திங்கட்கிழமை அழைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

