மக்கள் தே.மு.தி.க.வினர் 25 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைவு

445 0

201607180745166213_MK-Stalin-presence-of-makkal-DMDK-25-thousands-of-people_SECVPFகடந்த சட்டசபை தேர்தலின்போது, மக்கள்நல கூட்டணியுடன் இணைந்து தே.மு.தி.க. தேர்தலை சந்தித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.க.வுடன் கூட்டணி சேர வலியுறுத்தியும் அந்த கட்சியின் முன்னைய எம்.எல். ஏ.க்கள் சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் தலைமையில் மக்கள் தே.மு.தி.க. ஆரம்பிக்கப்பட்டது.
தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியை மக்கள் தே.மு.தி.க. நிர்வாகிகள் சந்திரகுமார் தலைமையில் சந்தித்து கலந்துரையாடினர்.
அதன்போது அவர்கள் மக்கள் தே.மு.தி.க.வை தி.மு.க.வுடன் இணைக்க விருப்பம் தெரிவித்தனர்.
இதையடுத்து இதற்கான இணைப்பு விழா பொதுக்கூட்டம் சேலத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தி.மு.க.வுடன் மக்கள் தே.மு.தி.க. இணைப்பு விழா பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்றது.
இதன்போது. தமிழகம் முழுவதும் மக்கள் தே.மு.தி.க.வை சேர்ந்த 25 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டது.