முல்லைப்பெரியாறு அணை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு – கேரள நிதி அமைச்சர்

634 0

201607180807292251_Kerala-Finance-Minister-Interview-Mullaperiyar-dam-issue_SECVPFஅண்டை மாநிலங்களோடு உள்ள பிரச்சினைகளை தீர்த்து சுமுக உறவு வைத்துக்கொள்வதில் கேரள அரசு ஆர்வமாக உள்ளது.
எனவே முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணப்படும் என கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கேரள எல்லையில் உள்ள வாளையாறு சோதனைச்சாவடியில் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு காத்திருப்பதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இன்னும் 3 மாதங்களில் வாளையாறு சோதனைச் சாவடி மேம்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.