அதிகாரிகளின் தவறுகளால் அரசியல்வாதிகள் ஏச்சு வாங்குகின்றனர்

98 0

நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் அனைத்து நகரங்களினதும் வளர்ச்சித் திட்டங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. அதற்கு அந்தந்த நகரங்களில் தொடர்புடைய மக்களின் கருத்துக்களையும் கவனத்தில் கொள்வது கட்டாயமானது என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கதிர்காமம் புனித பூமியின் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். குறித்த கலந்துரையாடல் இன்று (26) நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நகர அபிவிருத்தி அதிகாரசபையால் தயாரிக்கப்பட்ட சில நகர திட்டங்கள் புதுப்பித்த நிலையில் உள்ளன என்று அங்கு சுட்டிக்காட்டினார். அது பொருந்தாது என்றும் எனவே, அந்த திட்டங்கள் நிகழ்காலத்திற்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்பட்டு, நகர வளர்ச்சியும் தற்போதையதாக இருக்க வேண்டும் என்பதோடு உலகுக்கு ஏற்றவாறும் கதிர்காமம் சிறப்பு நகரங்கள், அந்த நகரங்களின் வரலாற்று மதிப்பை பாதுகாக்க அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“சில அதிகாரிகள் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து இந்தத் திட்டங்களை உருவாக்குகிறார்கள். அந்த திட்டங்கள் நிலம் பொருந்தாத பல சூழ்நிலைகள் உள்ளன. இதன் காரணமாக நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகள் எதிர்பார்த்த இலக்குகளை அடையவில்லை. ஆனால் இதற்குப் பொறுப்பான அமைச்சர்கள் மீது அல்லது அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்படுகிறது. அதிகாரிகளின் பணியால் தான் அரசியல்வாதிகளாகிய எங்களை ஏச்சுகின்ற நிலைமையே ஏற்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

“கதிர்காமம் புனித யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கான தேவையான வசதிகள் வழங்குவதைப் போல புனித பூமியின் மாண்பை பாதுகாப்பதில் உங்களுடைய திட்டமிடல் முக்கியம்” என்று திரு. ரணதுங்க இங்கு மேலும் தெரிவித்தார்.

கதிர்காமம் புனித பூமி தொடர்பான அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் அமைச்சரின் விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக நகரில் உள்ள சட்டவிரோத கடைகளை அகற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நீண்ட நேரம் கவனம் செலுத்தப்பட்டது. கதிர்காமம் புனித பூமியின் அபிவிருத்திக்கான கூட்டு திட்டத்தை செயல்படுத்தவும் இங்கு முடிவு செய்யப்பட்டது.