பொங்கல் புத்தாண்டினை முன்னிட்டு, ஒஸ்னாபுறுக் தமிழாலயத்தினால் சென்ற 22.01.2023அன்று தமிழர் திருநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.மண்டப வாசலில் வண்ணக்கோலமிட்டு, மாவிலையும் தோரணமும் தொங்க, அருகில் கரும்பும் தென்னம்பாளையும் மணம் பரப்பும் பலாப்பழமும் கூடவே வாழைக்குலையுமென ,எமது தாய்நிலமாம் தமிழீழத்தினை மாணவச் செல்வங்கள் ஒரு நாள் கண்முன்னே கண்டு மகிழ்ந்தனர். பெற்றோரோடு பிள்ளைகளுமாய் பண்பாட்டு உடையணிந்து மண்பானையில் பொங்கல் பொங்கிய காட்சி தமிழ்த் தொன்மத்தின் மாட்சி. தொடர்ந்து அகவணக்கத்தோடு ஒஸ்னாபுறுக் தமிழாலய நிர்வாகி திரு. வாசன் அவர்களது வரவேற்புரையுடனும், இளைய ஆசிரியர்களின் நெறி ஆள்கையில் விழா நிகழ்வுகள் ஆரம்பமாகியது. விடுதலை நடனங்கள், உரைகள்,பொங்கல் பாடல்கள் என பல்வேறு நிகழ்வுகள் பார்த்தவர் மனங்களில் பரவசமூட்டியது. காலை 9மணிக்கு ஆரம்பித்த தமிழர்திருநாள் விழா மாலை 5:30 மணிக்கு “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் “எனும் தாரக மந்திரத்தோடு நிறைவு பெற்றது.
- Home
- முக்கிய செய்திகள்
- ஒஸ்னாபுறுக் தமிழாலய தமிழர் திருநாள்-2023 (காணொளி
ஆசிரியர் தலையங்கம்
-
சர்வதேச மகளிர் தினம்
March 7, 2023 -
காற்றில் கலந்தது கானக்குயில்!
February 6, 2023 -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்தது யார்?
January 31, 2023
தமிழர் வரலாறு
-
மாவீரர் கேணல் கிட்டு
January 16, 2023 -
‘தலைவரின் அக்கினிக்குழந்தை லெப் கேணல் அகிலா.!’
October 30, 2022 -
தியாகி லெப் கேணல் திலீபனின் தியாகப்பயணம் -பன்னிரண்டாம் நாள் 26-09-1987
September 26, 2022
கட்டுரைகள்
-
மாமனாரும் மருமகனும் சர்வகட்சி மாநாடுகளும்
March 20, 2023
எம்மவர் நிகழ்வுகள்
-
அன்னை பூபதி,நாட்டுப்பற்றாளர் தினம் – யேர்மனி 2023
March 20, 2023 -
தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனியின் 33 ஆவது அகவை நிறைவு விழா.
March 19, 2023 -
யேர்மனியின் தலைநகரில் தலைமுறை தாண்டி பேரன், பேத்தி கண்ட தமிழாலயம்!
February 22, 2023 -
அனைத்துலகப் பெண்கள் தினம்,2023 -யேர்மனி.
February 20, 2023 -
தமிழ்ப் பெண்கள் அமைப்பு- யேர்மனி நடாத்தும் வாகைமயில் 2023.
February 20, 2023 -
தேசிய மாவீரர் நாள் – 2021 சிறப்பு வெளியீடுகள்
November 22, 2021