களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நோயாளி ஒருவர் நான்காவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தேவத்தை, கோணபொல பகுதியைச் சேர்ந்த குருப்பு அச்சிகே சந்திரசோம (65) என்பவரே இவ்வாறு தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் இன்று புதன்கிழமை (14) அதிகாலை 5.30 மணியளவில் விடுதியில் உள்நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்துக்கு உணவு உண்பதற்காக சென்று கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.