புலம்பெயர்வாளர்களின் சுகாதாரம் தொடர்பான சர்வதேச மாநாடு கொழும்பில்

248 0

புலம்பெயர்வாளர்களின் சுகாதாரம் தொடர்பான சர்வதேச மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமானது.

உலக சுகாதார அமைப்பு, புலம்பெயர்வாளர்களுக்கான சர்வதேச அமைப்பு, இலங்கை அரசாங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு எதிர்வரும் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

சர்வதேச ரீதியில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் சுகாதாரம் தொடர்பாக இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது.