வங்கி ஒன்றின் பெண் முகாமையாளர் கணவனால் தாக்கப்பட்டுக் கொலை!

113 0

ஹக்மன பிரதேசத்தில் வங்கி ஒன்றின் பெண் முகாமையாளர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் ஹக்மன கெபிலியபொலயா தெற்கு  சனச வங்கிய வங்கியின் முகாமையாளர் என தெரிய வந்துள்ளது.

இவர் அவரது கணவராலேயே கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலினால் தலையிலும் கழுத்திலும் பலத்த காயங்களுக்குள்ளான அவர், பிரதேசவாசிகளால்  மீட்கப்பட்டு ஹக்மன கங்கோடாகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரான  கணவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.