லசந்த விக்ரமதுங்க கொலை – கைது செய்யப்பட்ட புலனாய்வு அலுவலருக்கு விளமக்கமறியல்

409 0

Lasantha3ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவத்தின் புலனாய்வு பிரிவு அலுவலரை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவம் தொடர்பில், இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.

இதனை அடுத்து அவரை  48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய கல்கிசை நீதவான் நேற்று உத்தரவிட்டார்.

இந்தநிலையில், இன்று மீண்டும் மன்றில் முன்னிலை செய்யப்பட்ட அவரை, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்தார்.