பிரான்ஸ் தாக்குதல் – மேலும் இருவர் கைது

344 0

fraபிரான்ஸ் பாரவூர்தி தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேத்தின் பேரில் தற்போது மேலும் இருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரெஞ் நீதித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நைஸ் என்ற இடத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆண் ஒருவரும் பெண் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளர்.
இந்த தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை பிரான்ஸ் மக்கள் தேசிய தினத்தை கொண்டாடிக்கொண்டிருந்த வேளை, டியுனீசியாவை சேர்ந்த ஒருவர் பாரவூர்தி ஒன்றை கொடூரமாக மக்கள் மீது செலுத்தினார்.
இந்த சம்பவத்தில் 84 பேர் பலியானதுடன், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.