திருகோணமலையில் 4 கைகுண்டுகள் மீட்பு

286 0

திருகோணமலை நகரின் மத்தியில் மடத்தடி சந்தியில் கிருஷணன் கோயிலுக்குள் பழையபொருட்கள் வைத்திருக்கும் அறையில் பாவனைக்கு உட்படுத்தக்கூடிய நிலையில் 4 கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை தலைமை பொலிஸ் காரியாலயலயத்திற்கு கிடைத்த தகவல் அடிப்படையில் அக்காரியாலய பொலிஸாரினால் இந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

SFG-87 பெயர் இடப்பட்டிருந்தபோதும் அதன் அடிச்சட்ட இலக்கம் அழிக்கப்பட்டிருப்பது காணக்கூடியதாக இருந்தது