பிரதான வைத்தியசாலைகளின், கழிவு முகாமைத்துவ பொறிமுறையை அபிவிருத்தி செய்ய…………(காணொளி)

308 0

வடக்கு மாகாணத்திலுள்ள பிரதான வைத்தியசாலைகளின், கழிவு முகாமைத்துவ பொறிமுறையை அபிவிருத்தி செய்ய உதவுமாறு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் முகாமைத்துவ தொகுதியயை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போNது அமைச்சர் இந்தக்கோரிக்கை முன்வைத்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய சுகாதார அமைச்சர்.

இலங்கையில் நீரினால் பரம்பலடையும் நோய்களின் தாக்கம் கூடிய மாகாணமாக வடக்கு மாகாணம் திகழ்கிறது.

அதிலும் மன்னார், யாழ்ப்பாண மாவட்டங்களில் நிலத்தடிநீர் மாசடைவதால் நீரினால் பரம்பலடையும் நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இவ்வாறான திட்டங்களின் மூலம் தொற்று நோய்களின் தாக்கத்தை குறைக்கலாம். இதுவரை காலமும் வைத்தியசாலை கழிவுகள் பாதுகாப்பற்ற முறையிலேயே அகற்றப்பட்டு வந்துள்ளது.

தற்போது இதற்காக பிரத்தியேக அமைக்கப்ட்டுள்ள இந்த கழிவு முகாமைத்துவ திட்டத்தின்மூலம் சுற்றுச்சூழல் மாசடைவது தடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அதனை நடைமுறைப்படுத்திய யுனொப்ஸ் நிறுவனத்திற்கும் வடக்கு மாகாண மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் என்ற வகையில் வடக்கின் ஏனைய மாவட்ட வைத்தியசாலைகளிலும் இவ்வாறான கழிவுமுகாமைத்துவ தொகுதிகளை அமைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவி செய்யவேண்டும்.என மேலும் கேட்டுக்கொண்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனொப்ஸ் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் மாவட்ட அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ், வவுனியா வைத்தியசாலையில் கழிவுகளை சுகாதார முறைப்படி அகற்றும் பொறிமுறை தொகுதிக்கான கட்டுமானப்பணி 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

60 மில்லியன் யூரோ செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கழிவு முகாமைத்தவ தொகுதியை கையளிக்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட பொது வத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கு.அகிலேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்திலிங்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி, யுனொப்ஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் றோகண புஸ்பகுமார, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ம.கிருபாசுதன், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் மு.மகேந்திரன் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.