எல்லை நிர்ணய அறிக்கை: நாளை வர்த்தமானி

266 0

எல்லை மீள் நிர்ணய ஆணைக்குழு கையளித்துள்ள, எல்லை நிர்ணய அறிக்கை, வர்த்தமானியில் நாளை (17) வெளியிடுவதற்காக, கைச்சாத்திடப்பட்டுள்ளது என்று, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

சுதந்திரக்கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று(16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “ எல்லை நிர்ணய அறிக்கையை, அச்சிட்டு வெளியிடுவதற்கு,  சிறிது காலம் எடுக்கும்.  அறிக்கையின் முழு விவரமும் அடுத்த வாரம் வெளியாகும்” என்றும் அவர் கூறினார். –