ஐந்து பொது நிறுவனங்களுக்கு கோப் குழு அழைப்பு

242 0

மேலும் பொது நிறுவனங்கள் ஐந்தின் பிரதானிகள் அடுத்த வாரம் கோப் குழுவிற்கு அழைக்கப்படவுள்ளனர்.

கோப் குழுவின் தலைவர், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அரசாங்க ஊடக நிறுவனம் உள்ளிட்ட மேலும் சில நிறுவனங்களின் 5 பிரதானிகள் இவ்வாறு அழைக்க முடிவு செய்துள்ளதாக எமது செய்தி பிரிவுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 21, 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் இவர்கள் கோப் குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.