4 மாதங்களுக்கு பின் ரஷ்ய விமானம் இலங்கையில்

166 0
ரஷ்ய விமான சேவைக்கு சொந்தமான ஏரோப்ளோட் (Aeroflot) விமானம் இன்று (10) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

4 மாதங்களுக்குப் பிறகே ஏரோப்ளோட் விமானம் மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையிலான சேவை​யை தொடங்கியுள்ளது.

ஏரோப்ளோட் விமான சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால், இலங்கைக்கு ரஷ்ய சுற்றுப்பயணிகளின் வருகை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.