சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கு அவசர அழைப்பு

133 0

இலங்கை சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் இன்று கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் 2.00 மணிக்கு கட்சி தலைமையகத்தில் விஷேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்கள் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கட்சி அரசியலமைப்பின் திருத்தத்திற்குப் பிறகு அவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.