கிளிநொச்சி அரச அதிபர் கிண்ணத்தை கரைச்சி பிரதேச செயலக அணி கைப்பற்றியது

234 0
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் உள்ள 4 பிரதேச்செயலகங்களுக்கிடையிலான அரச அதிபர் வெற்றிக்கிண்ணப் போட்டியில் கரைச்சிப் பிரதேச செயலக அணி கேடயத்தினை சுவீகரித்துக் கொண்டது.
கிளிநொச்சி மாவட்ட பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் இராணுவத்தினரின் வசமிருந்து விடிவிக்கப்பட்ட மருதநார் உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம்  இடம்பெற்ற இறுதி நிகழ்வில் இக் கேடயம் கரைச்சிப் பிரதேச செயலாளர் தலமையிலான அணியிடம் கையளிக்கப்பட்டது.
இதில் பங்கு பற்றிய அணிகளில் கரைச்ணிப் பிரதேச செயலாளர் அணி 48 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்று கேடயத்தினை சுவீகரித்ததோடு  பளை பிரதேச செயலக அணி 44 புள்ளிகளுடன் 2ம் இடத்திணையும் மாவட்டச் செயலக அணியினர் 25 புள்ளிகளுடன் 3ம் இடத்திணையும் தட்டிக்கொண்டனர்.
இதேநேரம் பூநகரி மற்றும் கண்டாவளைப் பிரதேச செயலக அணியினர் தலா 10 புள்ளிகளைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது